முசலியில் முதிரை மரக்குற்றிகளுடன் கைது செய்யப்பட்ட 15 இராணுவ வீரர்கள் பிணையில் செல்ல அனுமதி-படங்கள் இணைப்பு
அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 15 இராணுவ வீரர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பினையில் செல்ல மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
கஜிவத்தை இராணுவ முகாமில் உள்ள இராணுவ வீரர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை தமது தேவைக்காக விறகு வெட்டச் சென்ற நிலையில் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த 14 முதிரை மரக்குற்றிகளை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கஜிவத்தை இராணுவ முகாமிற்குச் சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த மரக்குற்றிகளுடன் சென்ற இராணுவத்தின் வாகனத்தை சிலாபத்துறை பொலிஸார் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து சோதனையிட்டனர்.
எனினும் முதிரை மரக்குற்றிகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த முதிரை மரக்கற்றிகளுடன் சென்ற 15 இராணுவ வீரர்களை சிலாபத்துறை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இராணுவ வீரர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைனயில் செல்ல அனுமதித்தார்.
முசலியில் முதிரை மரக்குற்றிகளுடன் கைது செய்யப்பட்ட 15 இராணுவ வீரர்கள் பிணையில் செல்ல அனுமதி-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:



No comments:
Post a Comment