அண்மைய செய்திகள்

recent
-

வலி,வடக்கு மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்! -






வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்து பிரதமருக்கு அறிக்கை வழங்குவதற்கான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படவேண்டும். மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் பல hலி விமான நிலையம் விஸ்த்தரிப்பு மற்றும் மயிலிட்டி மீன்படி துறைமுகம் விஸ்த்தரிப்பு போன்ற வற்றை மக்களுடைய விருப்பத்தை அறிந்து செயற்படுத்தலாம்.

மேற்கண்டவாறு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்து பிரதமருக்கு அறிக்கை வழங்குவதற்கான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளீர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் வலி,வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரதிநிதிகளின் பங்களிப்புடன் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் மாலை 2 மணிக்கு மேற்படி கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தில் வலி,வடக்கு மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மக்களுடன் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பாக மக்கள் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனடிப்படையில் கூட்டத்தின் நிறைவில் 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அவற்றை முதலமைச்சர் குறிப்பிடுகையில்

வலி,வடக்கு மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கு முன்னதாக அந்த மக்களுடைய காணிகள் அளவீடு செய்யப்படக்கூடாது. என்பதுடன், மீள்குடியேற்றத்தின் போது மக்களுக்கு சகலவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் விமான நிலையம் விஸ்தரிப்பு மற்றும், மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் விஸ்தரிப்பு போன்ற மக்களுடைய மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்களுடைய விருப்பத்தை அறிந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் மீள்குடியேறும் மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு முன்னதாக அவர்களுக்கு கடந்த 25 வருடங்களாக உண்டான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் பிரதமரின் கவனத்திற்கு யாழ்.மாவட்டச் செயலர் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளமை இங்கே
 குறிப்பிடத்தக்கதாகும்.



வலி,வடக்கு மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்! - Reviewed by Author on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.