அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்று யாழ். விஜயம்...


இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
விஜயம் மேற்கொண்ட தூவர் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னான நிலைமைகள் தொடர்பிலான அவதானங்களை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை நாட்டில் தூதுவராலயங்கள் இல்லாத நாடுகளின் தூதுவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தூதுவர்களே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் வடமாகாண ஆளுனரின் ஒழுங்கமைப்பில் வடபகுதிக்கான விஜயத்தை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரை சந்தித்து வடபகுதியின் நிலைமைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான அவதானங்களை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பு இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.





வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்று யாழ். விஜயம்... Reviewed by Author on February 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.