அண்மைய செய்திகள்

recent
-

சவூதியில் சதுரங்கத்துக்கு தடை.....


சவூதி அரேபியாவில் சதுரங்கம் (செஸ்) விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் செஸ் விளையாட்டை தடை செய்ய வேண்டுமென சவூதி அரேபிய மதகுரு வலியுறுத்தியுள்ளார். செஸ் அறிவுத்திறன் போட்டியாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு சவூதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை சவூதி அரேபியாவின் தலைமை மதகுரு ஷேக் அப்துல் அஷிஷ்  பின்  அப்துல்லா அல்  ஷேக் பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது .இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

செஸ் விளையாட்டு மக்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி விரயம் செய்கிறது. இது குர்ரானால் தடை விதிக்கப்பட்ட மைசிர் என்ற விளையாட்டுடன் தொடர்புடையது. எனவே இந்த விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றார். ஆனால் மதத் தலைவர் அப்துல்லா அல்  ஷேக்கின் இந்த அதிகாரபூர்வ ஆணைப்படி செஸ் விளையாட்டுக்கு சவூதி அரேபியாவில் தடைவிதிக்க முடியாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையே மெக்காவில்  வருகிற வெள்ளிக்கிழமை செஸ் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மதகுரு விதித்துள்ள தடை குறித்து சவூதி செஸ் சங்கத்தின் சட்டக்குழு கூடி  விவாதித்தது. முடிவில் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என அதன் தலைவர் முசாபின் தைலி அறிவித்துள்ளார்.
சவூதியில் சதுரங்கத்துக்கு தடை..... Reviewed by Author on February 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.