அண்மைய செய்திகள்

recent
-

காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? ....


காணாமல் போன­வர்­களின் உண்­மை­யான நிலைமை தொடர் பில் புதிய அர­சாங்கம் ­பா­ரா­ளு­மன்­றத்தில் தெளி­வான அறிக்கை ­யொன்றை சமர்ப்­பிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எம்.பி. செல்வம் அடைக்­க­ல­நாதன் நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

படை­யி­ன-­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

வடக்கு கிழக்கில் காணாமல் போன­வர்­க­ளுக்கு மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கு­வது தொடர்பில் ஐ.தே.கட்சி எம்.பி. புத்­திக பத்­தி­ரண பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முன்­வைத்த தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்றுகையிலேயே செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வடக்கு கிழக்கில் காணாமல் போன­வர்கள் வெள்ளை வான்­களில் கடத்­தப்­பட்­ட­வர்கள்.

கண்­முன்னே போரிலே காணாமல் போன­வர்கள் பெற்றோர், உற­வி­னர்­களால் படை­யி­ன­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு காணாமல் போன­வர்கள் போன்­ற­வர்­களின் நிலை என்­ன­வென்­பதை ஆராய வேண்டும்.

இர­க­சிய முகாம்கள் மற்றும் காணாமல் போன­வர்கள் தொடர்பில் புதிய அர­சுக்கு விட­யங்கள் தெரிந்­தி­ருக்கும். இதே­வேளை இது தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­குழு காணாமல் போன­வர்­க­க­ளுக்கு மரணச் சான்­றி­தழும் ரூபா ஒரு இலட்­சமும் வழங்­கப்­படும் என்று தெரி­வித்­தி­ருந்தது.

விசா­ர­ணைகள் முடிவு பெறு­வ­தற்கு முன்­ப­தாக மேற்­கண்­ட­வாறு எவ்­வாறு தெரி­விக்க முடியும். கடந்த ஆட்­சியில் தமிழ் மக்கள் கொடு­மை­களை அனு­ப­வித்­தனர்.

புலி­க­ளுடன் இருந்தோர் கைய­ளிக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தன. புதிய அர­சாங்கம் இவ்­வி­ட­யங்களில் தெரிந்­தி­ருக்க வேண்டும்.

அத்­தோடு காணாமல் போன­வர்கள் அனை­வரும் இறந்­தி­ருக்­கலாம் என பிர­தமர் தெரி­வித்­தி­ருந்தார். இது பொறுப்­பற்ற கருத்­தாகும். எனவே காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றை அரசு பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்றார்.

காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? .... Reviewed by Author on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.