அண்மைய செய்திகள்

recent
-

காணாமல்போனோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்....


காணாமல் போன­வர்கள் மரணச் சான்­றி­தழை பெற்றுக் கொள்­வ­தற்கு தயா­ரில்­லாத நிலையில் காணப்­ப­டு­கின்­றார்கள். எனினும் காணாமல் போனோ­ருக்­கான காணாமல்போன சான்­றி­தழை வழங்­கு­வ­தற்கு நாம் தீர்­மானம் எடுத்­துள்ளோம். அதற்­கான சான்­றி­தழை எதிர்­வரும் இரண்டு மாத­காலப் பகு­திக்குள் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம் என்று உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தெரி­வித்தார்.

வடக்கு கிழக்கில் காணா­மற்­போன தமிழ் மற்றும் ஏனைய மக்­க­ளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ர­ண நேற்றுக் கொண்டு வந்த பிரேரணை மீதான விவாதத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், வடக்கு கிழக்கில் மட்­டு­மன்றி நாட­ளா­விய ரீதியில் காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பு இறப்புச் சட்­டத்தின் 110 ஆவது அத்­தி­யா­யத்தின் ஊடா­கவே மர­ணங்கள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. பொது­வாக மர­ண­ம­டை­கின்­ற­வர்­க­ளுக்கே இவ்­வா­றான மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

எமது நாட்டில் காணாமல் போன­வர்­க­ளுக்­கான மரண சான்­றி­தழை வழங்­கு­வ­தற்­கான சட்­டங்கள் காணப்­ப­ட­வில்லை. எமது நாட்டில் 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் காணாமல் போயுள்­ளார்கள். பயங்­க­ர­வாதக் கிளர்ச்­சிகள், சுனாமி போன்ற பல்­வேறு தரு­ணங்­களில் காணாமல் போயுள்­ளார்கள்.

அதே­நேரம் உயி­ரி­ழந்­ததை உற­வி­னர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத நிலை­மை­களும் காணப்­ப­டு­கின்­றன. எனவே 2010 ஆண்டு 19 ஆவது திருத்­தத்­திற்கு அமை­வாக காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு காணாமற் போன­வர்கள தொடர்பாக சான்­றி­தழை வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். இதற்­கான சட்­டத்தை அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­களம் மூலம் சட்ட பதி­வாளர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைத்­துள்ளோம். எதிர்­வரும் இரு மாத காலத்­தினுள் காணாமற் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு காணாமற் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அதேநேரம் காணாமல் போனவர்கள் மீள்வரும் போது அதனை மீள்பதிப்பதற்கான ஏற்பாடுகளும் அவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கான உள்ளடக்கங்களும் காணப்படுகின்றன என்றார்.
காணாமல்போனோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.... Reviewed by Author on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.