தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது பதக்கத்தை பெற்றது இலங்கை....
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது பதக்கத்தை இலங்கை பெற்றுள்ளது. 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா அஸாம் மாநிலத்தின் குவாட்டியில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இதில் பங்கேற்கும் இலங்கை குழாத்தின் ஒரு பிரிவினர் நேற்று இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
இம்முறை நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 467 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதேவேளை இந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் பதக்கத்தை இன்று சுவீகரித்துள்ளது.
48 கிலோ கிராம் எடைப் பிரிவில் பழு தூக்கும் வீராங்கணை தினூஷா ஹன்சினி வௌ்ளிப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.
இதே எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றெடுத்ததுடன் வெண்கலப் பதக்கத்தை பங்களாதேஷ் சுவீகரித்தது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது பதக்கத்தை பெற்றது இலங்கை....
Reviewed by Author
on
February 06, 2016
Rating:

No comments:
Post a Comment