
லண்டனில் முஸ்லீம் பெண் ஒருவர் பொது இடத்தில் நின்று கொண்டு தன்னை கட்டிப்பிடிக்குமாறு பொது மக்களை கேட்டுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் முனா ஆதான்(18). அவர் ஒரு அட்டையில் நான் ஒரு முஸ்லீம், தீவிரவாதி அல்ல. என்னை நம்பினால் கட்டிப்பிடியுங்கள் என்று எழுதினார். அந்த அட்டையுடன் அவர் மத்திய லண்டனில் உள்ள ஒரு பொது இடத்தில் நின்றார். அந்த வழியாக சென்றவர்கள் பலர் ஆதானின் அட்டையை பார்த்துவிட்டு அவரை கட்டிப்பிடித்தனர். இது குறித்து ஆதான் கூறுகையில், எப்பொழுது பார்த்தாலும் முஸ்லீம்கள் பற்றி கெட்ட செய்திகள் தான் வரும். அதனால் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. மனிதநேயம் சாகவில்லை என்றார். -
No comments:
Post a Comment