140 ஆண்டு கால சாதனை.........!!! முதன் முறையாக இந்திய அணி ........!!!
சிட்னியில் நடந்த 3 ஆவது "ருவென்ரி 20' போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 198 ஓட்டங்களை வெற்றி இலக்காக வைத்த போது, இந்திய அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே தோன்றிது. ஷேன் வற்சன் 74 பந்துகளில் 124 ஓட்டங்களை குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இந்தியாவை பொறுத்த வரை விராட் கோஹ்லியும் (50) ரோகித்தும் (52) தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தனர். இதனால், 140 கால அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு ( வைற் வாஷ் )செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியும் வெள்ளையடிப்பு செய்தது கிடையாது.
அவுஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வெள்ளையடிப்பு செய்த முதல் கப்டன் தோனி என்ற பெருமையும் கிடைத்துள்ளது. "ருவென்ரி 20' தொடரில் ஒரு துடுப்பாட்ட வீரர் தொடர்ந்து 3 அரை சதமடிப்பது இதுதான் முதல் முறை. இந்தியாவின் விராட் கோஹ்லி இந்த தொடரில் 90,59,50 ஓட்டங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். விராட் கோஹ்லியின் சராசரி 199, ஸ்ட்ரைக் ரேட் 160.48 ரோகித் சர்மா “ருவென்ரி20“ போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை அடித்த 3 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏனைய இரு வீரர்கள் விராட் கோஹ்லியும் சுரேஷ் ரெய்னாவும். அவுஸ்திரேலிய மண்ணில் அதிக முறை 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார். மொத்தம் 8 இனிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 5 அரை சதங்களும் 2 சதங்களும் அடித்துள்ளார்.
இதற்கு முன் 1985-86 ஆவது ஆண்டுகளில் சுனில் கவாஸ்கர் 7 அரை சதங்கள் அடித்துள்ளார். முதல் 6 ஓவர்களில் இரு அணிகளும் சேர்த்து 131 ஓட்டங்கள் குவித்துள்ளன. இதற்கு முன் அவுஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகள் இணைந்து 12 ஓட்டங்கள் அடித்ததே அதிகபட்சம். சர்வதேச "ருவென்ரி 20' போட்டியில் அவுஸ்திரேலிய அணி இவ்வளவு ஓட்டங்கள் குவித்தது இதுதான் முதன் முறையும். அதையும்.
இந்திய அணி தவிடுபொடியாக்கி 140 ஆண்டுகளில் முதன் முறையாக என்றால் என்ன?
என்று அவுஸ்திரேலியர்களுக்கு காட்டியுள்ளது. ஷேன் வாற்சன் சாதனை ஒரு பார்வை ஷேன் வற்சன் 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் சதமடித்த முதல் ஆ ஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருவென்ரி20 போட்டியில் 124 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் அடித்தவீரர் என்ற பெருமையும் வற்சனுக்கு கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர் மொகம்மத் ஷேஷாத் சிம்பாப்வே அணிக்கெதிராக இந்த மாத இறுதியில் 118 ஓட்டங்கள் அடித்ததே "ருவென்ரி 20' யில் அதிகபட்ச களாக இருந்தது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வற்சன் "ருவென்ரி20' போட்டியில் முதன் முறையாக 70 ஓட்டங்களை கடந்துள்ளார். அப்போது இலங்கை அணிக்கெதிராக 70 ஓட்டங்கள் அடித்ததே அதிகபட்சம் இதற்கு முன் டு பிளசிஸ் மற்றும் திலகரத்ன டில்ஷான் மட்டுமே "ருவென்ரி 20' போட்டியில் சதமடித்த பிற கப்டன்கள். இந்தியாவுக்கு எதிராக "ருவென்ரி 20' போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் வற்னுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் கிறிஸ் கெயில் 2010 ஆம் ஆண்டு 98 ஓட்டங்கள் அடித்திருந்தார்.
140 ஆண்டு கால சாதனை.........!!! முதன் முறையாக இந்திய அணி ........!!!
Reviewed by Author
on
February 03, 2016
Rating:
No comments:
Post a Comment