கிளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் பின்நோக்கிய நிலையில் உள்ளது: அரச அதிபர்
கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லீற்றர் பால் உற்பத்தி இடம்பெற்று வருகின்ற போதும் அதில் 35 வீதமான உற்பத்தியே மாவட்ட மக்கள் நுகர்கின்றனர் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் வேல்ட் விஷன் (World Vision) நிறுவனத்தின் அனுசரனையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை றிலையத்தினை திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
4.6 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி விற்பனை நிலையமானது மாவட்ட மக்களின் நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்வதனை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் பின்நோக்கிய நிலையில் காணப்படுகிறது அதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக மாவட்ட உற்பத்திகளில் பெரும்பாலானவை வெளியில் விற்பனையாகின்றமையே ஆகும்.
எனவே தான் கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்கின்ற பெரிய நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு இந் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய பால் உற்பத்தி 10 ஆயிரம் லீற்றராக காணப்படுவது போதுமானது அல்ல இங்குள்ள கால் நடைகளின் அளவுக்கேற்ப அது மேலும் அதிகரித்த தொகையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், வேல்ட் விஷன் நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் ஜொனாதன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் பின்நோக்கிய நிலையில் உள்ளது: அரச அதிபர்
Reviewed by Author
on
February 01, 2016
Rating:
No comments:
Post a Comment