மன்னார் நகர சபைப்பிரதேசத்திற்கு உட்பட்ட தெருவிளக்குகள் ஒளிரும்--- நகர சபைச்செயலாளர்
மன்னார் நகரப்பகுதியில் கிராமங்களில் உள்ள ஒழுங்கைகளில் இருள் மண்டிகிடக்கும் தெரு மின்விளக்குகள் ஒளிராத காரத்தினாலும் இல்லாத காரணத்தினாலும் மாலை 6-30 மணிக்கு பின் தேவையில்லாத செயற்பாடுகள் நடைபெறுகின்றது இரவுப்பயணங்கள் செய்வதில் சிரமமாகவும் உள்ளது. கட்டாக்காலி நாய்களின் தொல்லையுடன் இனம் தெரியாதவர்களின் நடமாட்டம் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக நியூ மன்னார் இணையம் மக்களின் வேண்டுகோளை ஏற்று மன்னார் நகர சபைச்செயலாளர் அவர்களிடம் கோரிக்கையை முன்வைத்தபோது.......
செயலாளர அவர்கள் கோரிக்கையை ஏற்கொண்டதோடு இன்னும் சில நாட்களுக்குள் மன்னார் நகரசபை பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து வீதிகளில் உள்ள தெருவிளக்குகளை ஒளிரச்செய்வதாகவும் அதே வேளை மக்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தெரு மின்விளக்குகளை உடைக்காமல் மக்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.
மன்னார் நகர சபைப்பிரதேசத்திற்கு உட்பட்ட தெருவிளக்குகள் ஒளிரும்--- நகர சபைச்செயலாளர்
Reviewed by Author
on
February 16, 2016
Rating:

No comments:
Post a Comment