மன்னார் மீனவர்களை தாக்கிய கடற்படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்.எம்.ஆலம்.-படம்
மீனவர்கள் சட்டத்திற்கு முரனான தொழிலில் அல்லது தவறான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் அம் மீனவர்களை கைது செய்து நீதிமன்றம் ஊடாக முன் நிறுத்தி அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் கடற்படையினர் சட்டத்தை கையில் எடுத்து மீனவர்களை வெட்டி துன்புறுத்திய சம்பவத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை(13) காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அந்தனி ஜேசுதாஸ்,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன மாவட்ட இணைப்பாளர் ஜே.ஜாட்சன் பிகிராடோ,வாங்காலை மீனவ சங்க ஆலோசகர் அருட்தந்தை ஜெயபாலன் மற்றும் மீனவ சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்துதெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நால்வர் மீது கடற்படையினர் கூறிய ஆயுதம் ஊடாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் ஒருவர் மிகவும் பாதிக்;கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட வைத்தியசாலையிலும்,மற்றும் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இருவரும் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்படை வீரர்கள் நடந்து கொண்டுள்ள முறை பாரதூரமானது.அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மீனவர்கள் சட்டத்திற்கு முரனான தொழில் அல்லது தவறான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் அம் மீனவர்களை நீதிமன்றம் ஊடாக முன் நிறுத்தி அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
சட்டத்தை காப்பதற்காக பொறுப்பானவர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளான ஒருவரின் நிலை இன்னும் கலைக்கிடமாகவே உள்ளது.
இவ்வாறான ஒரு சில கடற்படையினரின் செயற்பாடுகளால் முழுக்கடற்படையையும் நாம் குற்றம் சாட்டவோ,அல்லது குறை கூறவோ முடியாது.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறு மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுவதுடன் அதற்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்ட வேண்டும்.
சட்டத்திற்கு முரனான செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுதண்டனை பெற்றுக் கொடுக்கவும் இச் சம்வபத்தில் தொடர்பு பட்ட கடற்படையினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும்.என மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.இவ்விடையம் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன, நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர ,வடமாகாண கடற்தொழில் அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மீனவர்களை தாக்கிய கடற்படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்.எம்.ஆலம்.-படம்
Reviewed by NEWMANNAR
on
February 16, 2016
Rating:
No comments:
Post a Comment