அண்மைய செய்திகள்

recent
-

முருங்கன் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க தமிழ் அரசியல் தலைமைகள் முன்வரவில்லை-படம் இணைப்பு


மன்னார் முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு அவர்களின் தரிப்பிடம் மற்றும் சேவைகள் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக முரண்பாடான பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது.

இவ்விடையம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பல தடைவைகள் செய்தும் இது வரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என பாதீக்கப்பட்ட முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தல் அங்கம் வகிக்கின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் வடமாகாண சபை உறுப்பனர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் ஆகிஆயாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

முருங்கன் முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் சேவைகள் தொடர்பாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அப்பகுதி முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.

இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முருங்கன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள போதும் பொலிஸார் அரசியல் அழுத்தம் காரணமாக பக்கச்சார்பாக நடந்து கொள்ளுகின்றனர்.

இப்பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் அரசியல் வாதிகளும் அக்கரை இன்றி செயற்படுவதாக பாதீக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-மேலும் தமது வாழ்வாதார பிரச்சினையான குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழ் அரசியல் தலைவர்கள் உரிய முறையில் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகளை எடுத்து உரிய முடிவினை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-இவ்விடைம் தொடர்பாக முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் 30 பேர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றையும் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு கிடைக்காது விட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை(18) முருங்கன் பஸ் நிலைய திறப்பு விழாவின் போது பாதீக்கப்பட்டுள்ள முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தல் அங்கம் வகிக்கின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்களாகிய நாங்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்பினை தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தல் அங்கம் வகிக்கின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ; வடமாகாண சபை உறுப்பனர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்து.

(மன்னார் நிருபர்)











முருங்கன் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க தமிழ் அரசியல் தலைமைகள் முன்வரவில்லை-படம் இணைப்பு Reviewed by NEWMANNAR on February 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.