அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியை அண்டிய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிணற்றை சூழ்ந்து நீர் காணப்படுவதினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை- சட்டத்தரணி ஜீ.ராஜ குலேந்திரம்.


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணற்றை இன்று வெள்ளிக்கிழமை மதியம் நேரடியாக சென்று பார்வையிட்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா குறித்த பகுதியில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக வருகை தந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஜீ.ராஜ குலேந்திரம் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்கு அருகாமையில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றை மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று வெள்ளிக்கழமை மதியம் 1 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

-இதன் போது சம்பவ இடத்திற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக வருகை தந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஜீ.ராஜ குலேந்திரம் வருகை தந்திருந்தார்.
இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ஜீ.ராஜ குலேந்திரம் மேலும் தெரிவிக்கையில்,,,
-மன்னார் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய மாந்தை பகுதியிலே ஏற்கனவே கண்டு எடுக்கப்பட்டுள்ள 82 மனித எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரனை பற்றிய அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
-அத்தோடு கடந்த தவணையில் அதனை அண்டிய பகுதியில் இருக்கின்ற கிறுறு ஒன்றில் மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு இருப்பதினால் அதனையும் தோண்ட வேண்டும் என்ற விண்ணப்பம் காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளினுடைய வேண்டுகோலாக அமைந்திருந்தது.

-அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த பகுதியில் இருந்த கிணறு அடையாளம் காணப்பட்டது.
ஏற்கனவே அரச தரப்பினால் அவ்விடத்தில் அவ்வாறான ஒரு கிணறு இருக்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தும் பின்னர் அது நீதிமன்றத்தினால் சட்டத்தரணிகள் மூலம் அடையாளம் காணப்பட்டது.
-அதன் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த கிணற்றை தோண்டுவதற்காக உறிய அதிகாரிகளுக்கு அதனை தோண்டுவதற்கான உபகரணங்களுடன் வருவதற்கும்,அதே போன்று அதனை தோன்டினால் அதனுள் எச்சங்கள் இருப்பின் அதனை முறையாக வெளியில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் உரிய திணைக்களங்களைச் சேர்ந்தவர்களை வருகை தரும்படி கூறியிருந்தனர்.
-ஆனால் குறித்த கிணற்றை அண்டிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதினால் குறித்த கருமத்தை இன்று (வெள்ளிக்கிழமை) செய்யக்கூடிய வாய்ப்பு இல்லாமையினால் குறித்த பகுதியை தோண்ட முடியாது என மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்றில் கூறியிருந்தார்.
இதனால் குறித்த பகுதியில் காணப்படும் மனித எச்சங்களை கண்டு பிடிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் இதனால் அப்பகுதி காய்ந்த பின் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.
இருப்பினும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சார்பாக ஏற்பட்ட சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தின் பேரில் மன்னார் நீதவான் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு குறித்த இடத்தில் இருந்து ஒரு கட்டளையை பிறப்பித்தார்.
அதன் பிரகாரம் வெள்ளத்தை அகற்றி மேலும் இப்பகுதிக்கு வெள்ளம் வராமல் அதனைச் சுற்றி அணையை கட்டி அப்பகுதியை காயச் செய்து எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4 ஆம் திகதி அகழ்வு செய்கின்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு ஏதுவாக அதனைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.அதே போல அப்பகுதிக்கான கிராம அலுவலகரும் வரவளைக்கப்பட்டு அவரிடமும் சில கட்டளைகளை நீதவான் பிறப்பித்துள்ளார்.

அதன் பிரகாரம் குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4 ஆம் திகதி(04-04-2016) மீண்டும் விசாரனைகளுக்காக அழைக்கப்பட இருக்கின்றது.
அன்றைய தினம் அப்பகுதி காயவைக்கப்பட்டு உலர வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படும்.
தொடர்ச்சியாக 4 தினங்களுக்கு அகழ்வு பணிகள் இடம் பெறும் என அகழ்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மன்னார் நீதவான் கட்டளையிட்டுள்ளார் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக வருகை தந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஜீ.ராஜ குலேந்திரம் மேலும் தெரிவித்தார்.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியை அண்டிய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிணற்றை சூழ்ந்து நீர் காணப்படுவதினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை- சட்டத்தரணி ஜீ.ராஜ குலேந்திரம். Reviewed by NEWMANNAR on February 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.