அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்-Photos


வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தை வடமாகாண மீனவர் கூட்டுறவுச் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகினறனர். இதன்போது இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கை மீனவர்களின் வலைகள் சேதமடைகின்றது.

இது பற்றி அரசாங்கத்திடம் பலதடவைகள் முறையிட்ட போதும் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை விரைவாக பெற்றுத்தர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மீண்டும் மீண்டும் பல போராட்டங்களை நடத்த நேரிடும் என மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டுவருவதற்காகவே இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.





வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்-Photos Reviewed by NEWMANNAR on February 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.