அண்மைய செய்திகள்

recent
-

எந்த நேரமும் மூடி காணப்படும் மன்னார் மூர்வீதி கிராம அலுவலகர் அலுவலகம்-Photos


மன்னார் மூர்விதி கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவகர், கடமை நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதில்லை என மூர்வீதி கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மூர்வீதி கிராம அலுவலகருக்கான அலுவலகம் அண்மைக்காலமாக மூர்வீதி கிராம பகுதியில் காணப்பட்டது.

தற்போது குறித்த கிராம சேவகருக்கு கடமையினை மேற்கொள்ள அலுவலகம் அமைக்க இடம் இல்லாத நிலையில் மூர்வீதி முத்தமிழ் மன்ற பகுதியில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மூர்வீதி கிராம அலுவலகர் குறித்த இடத்தில் தனது கடமைகளை மேற்கொண்டு வந்தார்.

எனினும் மூர்வீதி கிராம அலுவலகர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக அலுவலகத்தில் இருப்பதில்லை எனவும் அவசர தேவைகளுக்காக செல்லும் மக்கள் ஏமற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எந்த நேரம் சென்றாலும் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடமை நாட்களில் புதன் கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் கிராம அலுவலகர்கள் தமது அலுவலகங்களில் மக்கள் சேவைக்காக இருக்க வேண்டும்.

ஆனால் தொடர்ச்சியாக குறித்த கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பதில்லை எனவும் இதனால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மூர்வீதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பலர் மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனவே மூர்வீதி கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மூர்வீதி கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.











எந்த நேரமும் மூடி காணப்படும் மன்னார் மூர்வீதி கிராம அலுவலகர் அலுவலகம்-Photos Reviewed by NEWMANNAR on February 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.