உலகில் கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது : ஆய்வுகள் எச்சரிக்கை
உலகில் கடல் மட்டமானது கடந்த 2,800 வருடங்களில் இல்லாதவாறு பல மடங்கு வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
இது தொடர்பில் சர்வதேச விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வின் முடிவுகள் நஷனல் விஞ்ஞான அக்கடமியின் ஆய்வேட்டில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
1880 களிலான கைத்தொழில் மயமாக்கத்தையடுத்து உலகின் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
20 ஆம் நூற்றாண்டில் கடல் மட்டம் 14 சென்ரிமீற்றரால் உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1993 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தின் உயர்வு 30 சென்ரிமீற்றரால் அதிகரித்துள்ளதாக அந்த இரு ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
கடல் மட்டத்திலான மேலும் 45 சென்ரிமீற்றர் உயர்வு புயல்கள் உள்ளடங்கலான இயற்கை அனர்த்தங்களைத் தூண்டி பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த கடல் மட்ட உயர்வுக்கு பூகோள வெப்பமாதலே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது : ஆய்வுகள் எச்சரிக்கை
Reviewed by Author
on
February 25, 2016
Rating:

No comments:
Post a Comment