அண்மைய செய்திகள்

recent
-

கட்சி அரசியலையும் தாண்டி மக்களின் விடிவுக்கான பயணம் (வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன்)

தேர்தல் அரசியலுக்கும் கட்சி அரசியக்கும் அப்பாற்பட்ட எமதுமக்களின் விடிவு நோக்கிய பயணத்தையே தமிழ் மக்கள் பேரவை தனது பணியாக முன்னெடுத்து செல்லும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியநிபுணர் பூ.லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் திட்டமுன்வரைபு வெளியிடும் ஆரம்ப நிகழ்வு நேற்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வரைபு வரைதல் எனும் பொறுப்பன இலக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் செயற்படுத்தியுள்ளோம். இந்ததீ;ர்வு முன்வரைவு உருவாக்கப்பட்டு மக்களின்  முன்னால் வைக்கப்படும் நிகழ்விலே எமது இனத்தின் வரலாறு முக்கிய புள்ளியாக குறித்து கொள்ளப்படும்.
எமக்கு தேவையான தீர்வு வேறு எவருக்குமாது அல்லகாலம் காலமாக அழிவுக்குட்படுத்தப்பட்ட எமது மக்களுக்கானது. எமது மக்களின் நியாயமான இருப்புக்கானது. எமது மக்களுக்கான தீர்வானது பிறருக்கு முன்னால் வைக்கப்படுவதற்கு முன் எமது சொந்த மக்கள் முன் எந்தவிதமறைப்பும் இன்றி வெளிப்படுத்தப்பட்டு அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்கும் விமாசனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு மேலும் மெருகூட்டப்பட வேண்டும். இது ஒருமுன் வரைபே ஆகும் மக்களின் பங்களிப்புடன் இது இறுதிவடிவம் பெறும்.

வெறும் உணர்வுமயப்படுத்தப்பட்ட வர்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை பேச்சில் இருந்து விலகி ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாக அறிவுபூர்வமாக இதை நாம் அணுகி கலந்துரையாடல்களுக்கு உள்ளாகிமக்களின் விருப்பு இதுதான் என்பதை பேச்சுவார்தை மேடையில் எமது அரசியல் தலைமை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும்.

இது எமது இனத்துக்கு செய்ய வேண்டிய கடமையாகும். இதையே எமது நிபுணர் குழுவும் தமது புலைமையை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி முன் வரைபை உருவாக்கி தந்துள்ளனர். உண்மையில் இது மிகவும் சிக்கலான பணிஆகும்.

தமிழ் மக்கள் பேரவை திடீரென உருவாகிய ஒன்றல்ல 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழல் அமைப்பில் இப்படியான மக்கள் சக்திகள் கொள்கை வழி ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தீர்வு ஏற்ப்ட்டது. இந்த ஒன்றிணைவு தேர்தல்களுக்கு அப்பால்பட்டு கொள்கை வழி ரீதியாக இருக்க வேண்டும் என்பதற்காக 2009 இல் இருந்து திரைக்கு வராத பல்வேறு முயற்சிகள் பல்வேறு தரப்பினரால் முன்னெடுத்து வரப்பட்டது.

துரதிஸ்ட வசமாக அவை பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை ஆனால் இன்றைய நிலை மிகவும் சிக்கலானது பல்வேறுபட்ட சக்தி வாய்ந்த தரப்புகளின் கைகள் எம்மை உள்ளும் புறமுமாக சூழ்ந்துள்ளன.
எமது மக்களின் மனவிருப்புக்களையும் அபிலாசைகளையும் கருத்தில் கொள்ளாதுதாம் விரும்பிய பாதையில் எம்மை நடத்தி வைப்பதற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கைகள் நிறைந்த சிக்கலான காலகட்டம் இன்றி எமதுமக்களின் பேரால் இத்தனை காலமும் நாம் அனுபவித்த பேரிழப்புக்கள் எமக்காக மேற்கொள்ளப்பட்ட தியாகங்களின் பெயரால் நாம் கொள்கை வழி ஒன்றிணைந்து நிக்கவேண்டிய தேவை மேலும் வலுப்பட்டுள்ளது. இச்  சூழலிலேயே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.

இதற்கான கலந்துரையாடல்கள் சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு எமது அடிப்படை தீர்வு மற்றும் நடந்த அநீதிகளுக்கான பொறுப்பு கூறல் சம்பந்தமாக ஒத்தகருத்துடையோரை முதற்கட்டமாக சேர்த்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. எமதுஅடிப்படைகளுடன் உடன்படுபவர்களைதொடர்ந்துஉள்வாங்கி இது மேலும் விரிவுபடுத்தப்படும் மேலும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.

நாம் ஆரம்பத்தில் இருந்து கூறிவருவது போல் தமிழ் மக்கள் பேரவையானது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எமது மக்களின் அரசியல் பயணமானது தேர்தலுக்கானது அல்லஎன்பதைதமிழ் மக்கள் பேரவை மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

மக்களின் வாழ்வும் இருப்பும் கூட அரசியல் தான் உணர்வு வயப்பட்ட அணுகு முறையை விடுத்து எமது பட்டறிவுப்பற்பட்டு அறிவுபூர்வமான சிந்தனையுடன் சவால்களை எதிர்கொள்வது தான் சவால்களை வெற்றியுடன் கடப்பதற்கான வழிமுறை ஆகும் .இதையே எமது அரசியற் கட்சியகளும் அரசியல் சக்திகளும் செய்யவேண்டும். மக்களுக்கானஅரசியல் விளிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான மக்கள் மயப்பட்ட பங்குபற்றலுடன்  கூடிய அரசியலையே தமிழ் மக்கள் பேரவை அனைவரிடமும் இருந்து எதிர்பார்கிறது இது  எந்தவொரு  இனத்துக்கோ அமைப்புக்கோ எதிரானது அல்ல. இது எமதுமக்களை அடக்கநினைப்பவர்களுக்கும் எமது மக்களின் அடையாளங்களை சிதைக்க நினைப்பவர்களுக்கும் மக்களின் அரசியல் முனைப்பை அடக்க நினைப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
இதேவேளை தமிழ் மக்கள் பேரவை குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் வரவேற்கிறோம் அது எம்மை மேலும் வழிப்படுத்தும்.

எமதுபேரவையானதுசாதிசமயம் சமூகபால்  பிரதேச ஒடுக்கு முறை அற்ற சமுதாயமாக உருவாகவேண்டும். எந்தவொரு பின்புலசக்தியும் இன்றி ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில் எம்மீது சுமத்தப்பட்ட பழிகளும் எதிர்பார்ப்புக்களும் அதிகமானது.

எம்மீது வைக்கப்படும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஆர்வத்துடன் எதிர்பர்க்கின்றோம். பர்வையாளராக இராது பங்காளிகளாகமாற வேண்டும் என்பதை வேண்டிநிற்கிறோம்.
எமது மக்களின் நலன் கருதி தனிப்பட்ட குறுகிய நலன்களை களைந்து கொள்கைவழி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிகழ்காலதேவையைமீண்டும் வலியுறுத்துகிறோம்.  வேறுபாடுகளை கசப்பான அனுபங்களை மறந்துமக்களுக்காக நேர்மையுடன் அர்ப்பணிப்புடன்  செயற்பட முன்வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்
கட்சி அரசியலையும் தாண்டி மக்களின் விடிவுக்கான பயணம் (வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன்) Reviewed by NEWMANNAR on February 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.