வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் வியாழனன்று இரவு ஏழரை மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு, சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது,
அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாதவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்த இந்திரராஜா மீது கிரிக்கெட் மட்டை போன்ற இரும்பினால் இந்;தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
February 19, 2016
Rating:

No comments:
Post a Comment