அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கில் 17,738 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன: புத்திக பத்திரண....


வடக்கு கிழக்கில் 17 ஆயிரத்து 738 ஏக்கர் காடு அழிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில பத்திரிகைகளும் இந்த விடயம் தொடர்பான செய்திகளை பிரசுரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து மற்றும் ஏனைய வன பகுதிகள் தொடர்பாகவே சர்ச்சைகள் நிலவுகின்றன.

யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் பயிர் நிலங்கள் காடுகளாக மாறி இருப்பின் அந்த காடுகளை அழிப்பதில் தவறில்லை.

எனினும் அரசுக்கு சொந்தமான வனாந்தரங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பவது தாமதமாகி வருவதே கவலைக்குரிய விடயமாகும் எனவும் புத்திக பத்திரண குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் 17,738 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன: புத்திக பத்திரண.... Reviewed by Author on March 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.