அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இராமேஸ்வரத்து மீனவர்கள் 9 பேர் கைது.(பெயர் விபரம் இணைப்பு -Photos



தலைமன்னார் கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை நேற்று சனிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 இராமேஸ்வரத்தைச்  சேர்ந்த குழந்தை சாமி கிறிஸ்துராஜ்(வயது-48),இன்னாசி ராயப்பன் (வயது-29),அமிர்தநாதன் அருள்ராஜ்(வயது-50),நீளமகன் தசியனன்(வயது-37),கலிவிற்ராஜ் அருள் ஞான பிரபு (வயது-29),சோசு ஆஸ்யேன்(வயது-43),கிருஸ்னன் ராஜரட்னம்(வயது-41),சிங்கபாண்டியன் அந்தோனியாரடிமை(வயது-37),தங்கவேல் லிங்கம்(வயது-43) ஆகிய 9 மீனவர்களும்  (IND/TN/10/MM/2084) இலக்கம் கொண்ட டோலர் மூலம் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் குறித்த மீனவர்களை கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

-பின்னர் கடற்படையினர் விசாரனைகளின் பின்னர் குறித்த 9 மீனவர்களையும் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த மீனவர்களை பார்வையிடுவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த மீனவர்கள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்தொழில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்
5-03-2016









தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இராமேஸ்வரத்து மீனவர்கள் 9 பேர் கைது.(பெயர் விபரம் இணைப்பு -Photos Reviewed by NEWMANNAR on March 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.