அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களையும் அழைக்க ஜனாதிபதி தீர்மானம்....
எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர்களையும் பங்கேற்கச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
மாகாணசபைகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்கேற்கச் செய்யவுள்ளனர்.
ஹிக்கடுவவில் நேற்று நடைபெற்ற 32ம் முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி, அமைச்சரைக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்கேற்கச் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களையும் முதலமைச்சர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக மாகாணசபைகளில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களையும் அழைக்க ஜனாதிபதி தீர்மானம்....
Reviewed by Author
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment