வெவ்வேறு ஆண்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்: அதிசய சம்பவம்...
வியட்நாமில் வெவ்வேறு ஆண்களின் மூலம் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வியட்நாமின் ஹனோய் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
தற்போது இரண்டு வயதாகும் இந்த குழந்தைகள் இருவரும் வெவ்வேறு உடல் அமைப்புகளுடன் இருந்துள்ளன.
முக பாவனைகள் வித்தியாசமாக இருப்பதால் சந்தேகம் கொண்ட கணவன், பிரசவத்தின் போது குழந்தையை மாற்றியதாக சந்தேகித்துள்ளார்.
எனவே குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய திட்டமிட்டார், அத்துடன் பரிசோதனை செய்து பார்த்ததில் ஒரு குழந்தை அவருக்கு பிறந்தது என்றும், மற்றொரு குழந்தை வேறொரு நபருக்கு பிறந்தது எனவும் தெரியவந்தது.
அதாவது வேறொரு நபர் மூலம் குழந்தை பிறந்தது உறுதிசெய்யப்பட்டது, பிரசவத்தின்போது குழந்தைகள் பல்வேறு மணிநேர வித்தியாசத்தில் பிறந்ததும் தெரியவந்தது.
வெவ்வேறு ஆண்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்: அதிசய சம்பவம்...
Reviewed by Author
on
March 09, 2016
Rating:

No comments:
Post a Comment