அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு...


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது எதிர்ப்பை வெளியிட்ட நாடுகளும் இன்று இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றன என்று அமைசசர் மஹிந்த சமரசிங்க ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இவரே மஹிந்தவின் ஆட்சியின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையுடன் சர்வதேசத்தின் உறவுகள் விருத்தியடைந்துள்ளன என்று அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உட்பட்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு முழுமையாக கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னர் இலங்கைக்கு சீனா வழங்கிய வழங்கிய உதவியை மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்தியாவுடன் சிறந்த உறவை அரசாங்கம் பேணிவருவதாகவும் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு... Reviewed by Author on March 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.