கிரிக்கெட் வீரர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடுவர்கள்! வெளியான முழுவிபரம்
கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களின் சம்பளப் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதன் படி ஒரு போட்டியில் நடுவர்களுக்கு அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.2.85 லட்சம் ஊதியமாக கிடைக்கிறதாம்.
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பணியாற்றும் ஆடுகள நடுவர் மற்றும் 3வது, 4வது நடுவர்களுக்கு ரூ.1,82,500 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஆனால் டி20 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.1,50,000 லட்சம் தான் வழங்கப்படுகிறது. இதன் படி டி20 போட்டியில் நடுவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது.
டெஸ்ட் போட்டியிலும் ஆடுகள நடுவர்களுக்கு ரூ.1,82,500 லட்சம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. அதேவேளை 3வது மற்றும் 4வது நடுவர்களுக்கு முறையே ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் கிடைக்கும்.
உள்ளூர் போட்டிகளில் நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள நடுவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.20,000 மற்றவர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடுவர்கள்! வெளியான முழுவிபரம்
Reviewed by Author
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment