மன்னார் பெரியகமம் கிராமம் புகை மண்டலத்தால்மூழ்கியது.(Photos)
மன்னார் பெரியகமம் கிராமம் இன்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் புகை மண்டலத்தினால் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பொது மயானதுக்கு பின்புறமாக மன்னார் நகர சபையினரால் கொட்டப்படும் கழிவுகள் எரியூட்டப்பட்டுள்ளமையினால் வெளியான தீயினாலும் வெளிக்கிளம்பிய புகை மண்டலத்தினாலும் பெரியகமம் கிராமமும் அதன் அயல் கிராமங்களும் புகை மண்டலமாகியுள்ளதாகவும் இதனால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த புகை மண்டலத்தினால் குழந்தைகள், முதியவார்கள்,நோயாளிகள் பொது மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனார்.
இவ்வாறு அங்கு கொட்டப்படும் கழிவுகள் அடிக்கடி எரியூட்டப்படுவதனால் ஏற்படும் புகையினால் அக்கிராம மக்கள் அடிக்கடி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும்,உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வெறுமனே சுழல் பாதுகாப்பு என்றும், நோயற்ற வாழ்வு என்றும் பதாதைகள் கட்டுவோர் இவ்விடயம் தொடார்பாகவும் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும்,குறிப்பாக மன்னார் மாவட்ட சுற்றுச்சூழல் திணைக்கள அதகாரிகள் இவ்விடையத்தில் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்ளுவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-மேலும் இவ்விடயம் தொடார்பாக மன்னார் நகர சபை நிர்வாகத்தினருக்கும்,மன்னார் சுற்றுச் சூழல் திணைக்களத்திற்கும்,அறிவித்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மன்னார் நகர சபை தமது பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கின்ற கழிவுப்பொருட்களை பதப்படுத்தி உறமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் அப்பகுதி மக்களின் வாழ்வியல் நடவடிக்கைகளை பாதீக்கின்ற வகையில் கழிவுப்பொருட்கள் எறிக்கப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்,மக்கள் பாதீப்பை ஏற்படுத்தும் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பெரியகமம் கிராமம் புகை மண்டலத்தால்மூழ்கியது.(Photos)
Reviewed by Admin
on
March 06, 2016
Rating:

No comments:
Post a Comment