அண்மைய செய்திகள்

recent
-

வடகிழக்கின் தமிழ் பெண்கள் கவனத்திற்கு "ROHYPNOL” என்ற மாத்திரை தொடர்பில் அதீத எச்சரிக்கை !!!!




வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி விடும்
இதன் மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது.

மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம்.

அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.

மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த Rohypnol.

மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.

மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…!

ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….!

குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது .

எனவே மேற்படி மருந்து தொடர்பாக விழிப்புடன் இருப்போம்.


வடகிழக்கின் தமிழ் பெண்கள் கவனத்திற்கு "ROHYPNOL” என்ற மாத்திரை தொடர்பில் அதீத எச்சரிக்கை !!!! Reviewed by Author on March 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.