இலவச மூக்குக்கண்ணாடி மற்றும் கதிரைகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்-படங்கள்
வாசிப்புக் கண் குறைபாடு கொண்டவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.கணசீலன் நேற்று ஞயிற்றுக்கிழமை மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வாசிப்பு கண் குறைபாடுகள் கொண்ட 50 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைத்தார்.
அதே வேளை மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம்,பெரிய முரிப்பு,மாதாகிராமம் ஆகிய 3 கிராமங்களிலும் இருந்து வாசிப்பு கண் குறைபாடுகள் கொண்ட 100 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குஞ்சுக்குளம் மற்றும் பெரிய முறிப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு ஒரு தொகுதி கதிரைகளையும் வடமாகாண சபை உறுப்பினர் தை;திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலவச மூக்குக்கண்ணாடி மற்றும் கதிரைகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 07, 2016
Rating:

No comments:
Post a Comment