அண்மைய செய்திகள்

recent
-

அதிக வெப்பநிலை காரணமாக 150 பேர் பலி....


இந்தியாவில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக, இதுவரை 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாத்திரம், 120க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சராசரியாக 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருவதாகவும் இந்த வெப்பநிலையானது எதிர்வரும் தினங்களில் 44 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் கடும் வெயிலுடனான காலநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக 150 பேர் பலி.... Reviewed by Author on April 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.