மன்னார்-பெரியமடுவில் குண்டுகள் கண்டுபிடிப்பு
மன்னார் - அடம்பன் பெரியமடு பிரதேசத்தில் 9 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அடம்பன் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
இவை யுத்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடம்பன் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பெரியமடு - முஸ்லிம் கிராமத்திற்கு அருகில் வைத்து குறித்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ராகவன் என்ற பெயர் பொதித்த கைக்குண்டுகள் உள்ளிட்ட 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார்-பெரியமடுவில் குண்டுகள் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 19, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 19, 2016
Rating:


No comments:
Post a Comment