பொலிஸ் மா அதிபருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பிரியாவிடை!
பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனுக்கு இன்று இராணுவத் தலைமையகத்தில் வைத்து இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று அவருக்கும் இராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் இடையில் சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது விசேட இராணுவ அணிவகுப்புடன் வரவேற்கப்பட்ட பொலிஸ் மா அதிபருக்கு இராணுவத்தளபதி நினைவுச் சின்னம் அளித்து கௌரவித்துள்ளார்.
அதனையடுத்து இருவரும் சுமார் அரைமணி நேரம் வரையில் சம்பிரதாயபூர்வ கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இராணுவத் தலைமையகத்திலிருந்து விடைபெற முன்னர் முக்கிய இராணுவ அதிகாரிகள் பலரும் பொலிஸ் மா அதிபருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பிரியாவிடை!
Reviewed by Author
on
April 08, 2016
Rating:

No comments:
Post a Comment