முன்னாள் போராளிகள் முன்னோக்கி செல்ல வேண்டும்! அரசாங்கம்....
போர் முடிந்த நிலையில் முன்னோக்கி செல்ல வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சுவாமிநாதன், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து கல்வி சுற்றுலாவை மேற்கொண்டு கொழும்பு வந்த 34 முன்னாள் போராளிகளிடம் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் தற்போதுள்ள அமைதி சூழ்நிலையை கெடுத்து நாட்டை துண்டாக்க சில தமிழ் மற்றும் சிங்கள குழுக்கள் முயற்சிப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்தநிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், அனைத்து சமூகங்களுடனும் இணைந்து வாழவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் போராளிகள் 34 பேரும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு சென்று பின்னரே இன்று கொழும்பு வந்தனர்.
முன்னாள் போராளிகள் முன்னோக்கி செல்ல வேண்டும்! அரசாங்கம்....
Reviewed by Author
on
April 30, 2016
Rating:

No comments:
Post a Comment