அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...


வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம், வீரபத்திரர் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சின்னத்துரை தயாளன் (வயது 43 ) ஒரு பிள்ளையின் தந்தையே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு... Reviewed by Author on April 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.