அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை தாக்க இருக்கும் ஆபத்து! காலநிலையில் மாற்றங்கள்,,,,



எதிர்வரும் நாட்களில் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தினால் இலங்கை உட்பட தென்னிந்தியாவிலும் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக காலநிலை தொடர்பான ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆய்வு மையம் கருத்து வெளியிடுகையில்,

வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரக் கூடிய சாத்தியபாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் இலங்கைத் தீவு முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை தாக்க இருக்கும் ஆபத்து! காலநிலையில் மாற்றங்கள்,,,, Reviewed by Author on April 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.