அண்மைய செய்திகள்

recent
-

நாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை, சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் நாடு சீர­ழியும்; சி.வி. எச்­ச­ரிக்கை....


நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற எண் ணம் எமக்­கில்லை. சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளப் பார்க்­கின்றோம். நாம் பிரிந்து செல்ல விரும்­பாது ஒருங்­கி­ணைந்து வாழ முன்­வந்­துள்­ள­மையால் சிங்­கள மக்கள் எங்­க­ளுக்கு சகல ஒத்­து­ழைப்­பையும் இசை­வையும் நல்க வேண்டும். இந்த சந்­தர்ப்­பத்தை கைந­ழுவ விட் டால் நாடு சீர­ழிந்து போகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் எச்­ச­ரித்­துள்ளார்.



சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டை இணைத்­துக்­கொள்ளப் பார்க்­கின்றோம். பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு அர­சியல் யாப்பை மாற்ற வேண்­டிய அவ­சியம் உள்­ளது. இத­னால்தான் எங்­க­ளு­டைய அர­சியல் தீர்வு முன்­மொ­ழி­வினை முன்­வைத்­தி­ருக்­கி­றோ­யொ­ழிய நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற எந்­த­வி­த­மான எண்­ணங்­களும் எமக்­கில்லை என்றும் முத­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரைவு முன்­மொ­ழி­வுக்­கு­ரிய விசேட சபை அமர்வு நேற்­றைய தினம் கைத­டியில் அமைந்­துள்ள பேரவை செய­லகக் கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. இதன்­போது முன்­மொ­ழி­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­தியும் உறுப்­பி­னர்­களின் உரை­க­ளுக்கு பதி­ல­ளித்தும் உரை­யாற்­றி­ய­போதே முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது வட­மா­காண சபை எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த சிங்­கள உறுப்­பி­னர்கள், வட­மா­காண சபையின் அர­சியல் தீர்வு முன்­மொ­ழி­வா­னது நாட்டில் பிரி­வி­னைகள், பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கும் நிலையை உரு­வாக்­க­வுள்­ளது என்ற அடிப்­ப­டையில் உரை­யாற்­றி­யி­ருந்­தனர். இதற்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நாட்டைப் பிரிக்கும் எண்ணம் எமக்­கில்லை என்று முத­ல­மைச்சர் தெரி­வித்தார்.

உறுப்­பி­னர்­களின் சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்யும் வகையில் பதி­ல­ளித்த முத­ல­மைச்சர்,

நாடு இப்­பொ­ழுது பல பிரி­வு­க­ளுக்குள் தான் அடங்­கி­யி­ருக்­கின்­றது. மாகாண சபை­களை பார்க்­கும்­போது பல பிரி­வுக்­குள்தான் இருக்­கின்­றது என்ற எண்ணம் தோன்­றி­யுள்­ளது. வட­கி­ழக்கு மாகா­ணங்கள் ஒரு­மித்து செயற்­பட்­டமை கிட்­டத்­தட்ட 18 வரு­டங்கள் என நான் நினைக்­கின்றேன்.

தமிழ்­பேசும் மக்­க­ளி­னு­டைய இடங்­களை ஒன்று சேர்த்து அவர்கள் தமி­ழி­லேயே தங்­க­ளு­டைய செயற்­பா­டு­களை வழி­ந­டத்திச் செல்­வ­தற்கும் பிரச்­சி­னை­களை தாங்­களே தீர்த்­துக்­கொள்­வ­தற்கும் வழி­மு­றை­களை வழங்­கு­வது எந்­த­வி­த­மான வகை­யிலும் பிரி­வி­னை­யாக அமை­யாது.

நாங்கள் நாட்டைப் பிரி­கின்றோம் என்று கூறும்­போது, நாங்கள் பிரிந்து செல்­வ­தாக ஒவ்­வொ­ரு­வரும் பேசு­கி­றார்கள். ஐந்­தாறு வரு­டங்­க­ளாக எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மில்­லாமல் நாங்கள் வாழ்ந்து வரு­கின்றோம் என கூறும் உறுப்­பி­ன­ரா­கிய நீங்கள், வட­மா­காண சபையின் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக பிரச்­சி­னைகள் ஏற்­ப­டப்­போ­கின்­றது எனக் கூறு­வது அர்த்­த­மில்­லாத பேச்­சாகும். ஏனென்றால் இந்த ஐந்­தாறு வரு­டங்கள் இளை­ஞர்கள் பல்­வேறு வகை­யான துன்­பங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அத்­துடன் சிறை­க­ளிலும் அடைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளது விடு­தலை தொடர்­பாக இது­வரை எவ்­வி­த­மான முன்­னெ­டுப்­புக்­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மேலும் கடந்த ஏழு வரு­டங்கள் முடி­வ­டைந்த நிலை­யிலும் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் எத்­த­கைய உறு­தி­மொ­ழி­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் தொடர்ச்­சி­யாக தமிழ் மக்­களின் சொந்த நிலங்­களில் இரா­ணு­வத்­தினர் இருந்து வரு­கின்­றனர். சுமார் 1 1ஃ2 இலட்சம் இரா­ணு­வத்­தினர் வடக்கில் இருக்­கி­றார்கள். இதனால் எமது மக்­களின் வாழ்­வா­தாரம் முற்­று­மு­ழு­தாகப் பாதிக்­கப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய பிரச்­சி­னைகள் குறித்து கடந்த ஏழு வரு­டங்­களில் எவ்­வி­த­மான ஆக்­க­பூர்வ நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. எனவே நீங்கள் கூறு­வது அர்த்­த­மற்ற பேச்­சாகும்.

நாங்கள் தமிழ் மக்கள் இடங்­களை ஒன்­றாக்­க­வேண்டும் எனக் கூறு­வதை நாட்டை பிரிக்கப் பார்க்­கி­றார்கள், பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தப் போகி­றார்கள் என்று நீங்கள் கூறு­வது மன வருத்­தத்தைத் தரு­கி­றது.

இத்­த­கைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து அவ­ரவர் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காணும் வகையில் அர­சியல் யாப்பை மாற்­ற­வேண்­டிய அவ­சியம் உள்­ளது. இத­னால்தான் எங்­க­ளு­டைய முன்­மொ­ழிவை முன்­வைத்­தி­ருக்­கின்­றோ­மே­யொ­ழிய நாட்டைப் பிரிக்­க­வேண்டும் என்ற எந்­த­வி­த­மான எண்­ணங்­களும் எமக்­கில்லை. நாங்கள் நட்டை இணைத்து வைப்­ப­தற்­கான எல்லா வித­மான நட­வ­டிக்­கை­க­ளை­யுமே எடுத்து வரு­கின்றோம்.

சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டைச் இணைத்துக் கொள்­ளப்­பார்­கின்றோம். நாங்கள் பிரி­வி­னைக்­கான எந்­த­வி­த­மான எதிர்­கேள்­வி­க­ளையோ அல்­லது எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளை­யுமோ எடுக்­க­வில்லை என்­பதைத் திட்­ட­வட்­ட­மாக கூறிக்­கொள்­கின்றேன். அந்த அடிப்­ப­டையில் தான் குறித்த முன்­மொ­ழி­வு­களை தயா­ரித்து இருக்­கின்றோம் எனத் தெரி­வித்தார்.

நாம் பிரிந்து செல்ல விரும்­ப­வில்லை அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்ளை முன்­மொ­ழி­வு­களை அறி­மு­கப்­ப­டுத்தி உரை­யாற்­றிய முத­ல­மைச்சர் தெரி­வித்­த­தா­வது,

பல நாட்­களின் பிர­யத்­த­னங்­களின் பின்னர் இக் கொள்கை முன்­மொ­ழிவை உங்கள் முன் சமர்ப்­பிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தை­யிட்டு மகிழ்­வ­டை­கின்றேன். குறை­மாதக் குழந்­தை­போல நாங்கள் உங்கள் முன் சமர்ப்­பித்த ஆரம்ப சமர்ப்­ப­ணங்கள் நாடு­பூ­ரா­கவும் பவ­னி­வந்து பலத்த விமர்­ச­னங்­களை ஏற்­க­னவே எதிர்­நோக்­கி­யுள்­ளன. இவ் ஆவ­ண­மா­னது எம் எல்­லோரின் எதிர்­பார்ப்­பையும் எடுத்­தி­யம்பும் ஆவ­ண­மென்றே கூற வேண்டும்.

மூன்று குழுக்கள் அமைத்து அவற்றின் சமர்ப்­ப­ணங்­களின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­டதே இந்த வரைவு. ஆகவே நாம் யாவரும் அதன் ஆக்­கி­யோரே. இது தனிப்­பட்ட ஒரு­வரின் வரை­வா­காது. நேற்­றி­ரவு கூட எம்முள் மூவர் இரவு வெகு­நே­ரம்­வரை வரைவை சரி­பிழை பார்த்துக் கொண்­டு­ருந்தோம். எங்கள் வரைவை நீங்கள் யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு.

ஒரு­வரின் சமர்ப்­ப­ணங்­களை நாங்கள் கைவிட வேண்­டி­யதாய் இருந்­தது. அவர் எமது இறை­யாண்மை பற்றி ஆவ­ணத்தில் இடப்­பெறச் செய்ய வேண்டும் என்று வாதா­டினார். இறை­யாண்மை என்ற கருத்து பல்­வேறு கருத்து வேற்­று­மை­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் உள்­ள­டக்­கப்­பட்­ட­தொன்று. போர்த்­துக்­கீசர் எம்மை வெற்றி கொண்­ட­போது எமது இறை­யாண்மை இல்­லா­தொ­ழிந்­தது. பின்னர் டச்­சுக்­காரர், ஆங்­கி­லேயர் என்று பலரின் அதி­கா­ரத்­தினுள் எமது இறை­யாண்மை சிக்கிக் கொண்­டது. ஆனால் நாடு சுதந்­திரம் அடைந்­த­போது நாம் எமது இறை­யாண்­மையைத் தனித்­து­வ­மாகக் கோராமல் மற்­றைய மக்­க­ளுடன் கூட்­ட­மாகச் சேர்ந்­து­இ­லங்கை மக்­க­ளுக்­கான இறை­யாண்மை என்ற கோரிக்­கை­யினுள் அமிழ்த்­தி­விட்டோம்.

ஆகவே அது பற்றிப் பேசாமல் சர்­வ­தேச ஒப்­பந்­தங்­களில் காணு­மாறு மக்கட் குழாம் தனது தனித்­து­வத்தைப் பேண எந்­த­வா­றான தகை­மை­களைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் எமது சுய­நிர்­ணய உரி­மையை வலி­யு­றுத்­தியே இந்த ஆவ­ணத்தைத் தயா­ரித்­துள்ளோம். கூடி­ய­வாறு முரண்­பா­டு­க­ளையும் தீவிரப் போக்­கு­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம். தீவிரப் போக்கு என்­பது நாம் எந்தக் கோணத்தில் இருந்து பார்க்­கின்றோம் என்­ப­தை­யொத்­தது. எம்மைப் பொறுத்­த­வரை மிகவுஞ் சாதா­ரண கருத்து வௌியி­ட­லாக உள்ள இந்த ஆவணம் தெற்கில் பலரைப் பேயாட்டம் ஆட வைத்­துள்­ளது. முத­ல­மைச்­சரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரு­கின்­றது ஒரு கட்சி.

ஒரு பிரச்­ச­னையைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் பிரச்­ச­னையின் சகல பரி­மா­ணங்­க­ளையுந் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்­வ­மாக அதனை அணுக வேண்டும். உணர்ச்சி பூர்­வ­மாக அணு­கு­வதால் பிரச்­ச­னைகள் மேலும் வலு­வ­டை­வன.

நாங்கள் எங்கள் ஆவ­ணத்தில் கூறி­யி­ருக்கும் விட­யங்கள் எவையும் புதி­ய­வை­யல்ல. காலஞ் சென்ற தந்தை செல்வா போன்­ற­வர்கள் கூறி­ய­தையே நாங்கள் இங்கு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். பிரி­வி­னைக்கு எதிர்­மா­றான ஒரு கருத்­தையே முன்­வைத்­துள்ளோம். நாட்­டினுள் அதி­கார அல­கு­களை உண்­டாக்­கு­வது அந்­தந்த மக்கட் கூட்­டங்கள் தத்­த­மது இடங்­களில் தங்கள் விட­யங்­களைத் தாங்­களே கையேற்று நிர்­வ­கிக்­கவே. இதுவே ஜன­நா­யகம்.

அண்­மையில் திரு.தினேஸ் குண­வர்த்­தன அவர்கள் கூறிய ஒரு கூற்­றுக்குச் சிங்­க­ளத்­திலும் தமி­ழிலும் பதில் அளித்­தி­ருந்தேன். சமஷ்டி என்ற கருத்தை ஏதோ தடை­செய்­யப்­பட்ட ஒரு கருத்­தாக அவர் கூறி­ய­மை­யினால் அவ­ருக்கு சமஷ்டி என்­ப­தற்­கான ஒரு சிறிய உதா­ர­ணத்தைக் கொடுத்­தி­ருந்தேன். அவரின் தந்தை திரு.பிலிப் குண­வர்த்­த­னாவை நான் தெரிந்­தி­ருந்தேன். திரு.பிலிப் குண­வர்த்­த­னாவின் பாரம்­ப­ரிய வீட்டில் இந்­திகஇ தினேஷ் போன்ற பிள்­ளைகள் வளர்ந்து வந்­தி­ருப்­பார்கள்.

அவர்கள் திரு­மணம் செய்த பின்­னரும் அதே பாரம்­ப­ரிய வீட்டில் இருப்­பது சரி­யில்லை என்று குறித்த பாரம்­ப­ரிய வீட்டுக் காணியில் தனி வீடுகள் கட்டிக் கொடுத்து சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரான திரு.தினேஷ் அவர்­களை தமது குடும்­பத்­துடன் அங்­கொரு வீட்டில் குடி­யேற விடு­கின்­றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைப் பிரிந்து செல்­வ­தாக எவரும் சொல்ல மாட்­டார்கள். ஒரே பாரம்­ப­ரிய வீட்டில் தாய் தந்­தை­ய­ருடன் பிள்­ளைகள் சுதந்­தி­ரமாய் வாழ்­வதை எவரும் வர­வேற்­பார்­களே ஔிய அதைப் பிரி­வினை என்று கூற மாட்­டார்கள். சமஷ்­டியும் அவ்­வா­றுதான். நாட்டைப் பிரிக்­காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்­க­ளு­டனும் சேர்ந்தே வாழ நாம் ஆசைப்­ப­டு­கின்றோம். அதனை வலி­யு­றுத்­தியே எமது வரைவை நாம் யார்த்­தி­ருக்­கின்றோம்.

நாம் பிரிந்து செல்ல விரும்­பாது ஒருங்­கி­ணைந்து வாழ முன்­வந்­துள்­ள­மையால் சிங்­கள மக்கள் எங்­க­ளுக்குச் சகல ஒத்­து­ழைப்­பையும் இசை­வையும் நல்க வேண்டும். முன்னர் 1958ல் சேர்ந்து வாழ ஒரு வழி அமைக்­கப்­பட்­டது. பண்­டா­ர­நா­யக்க செல்­வ­நா­யகம் ஒப்­பந்தம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் இன்று கூட அன்று போல் எம்­மையே முத­லு­தா­ர­ண­மாகச் சிங்­கப்பூர் போன்ற நாடுகள் எடுத்துக் காட்­டி­யி­ருப்­பன. லீ குவான் யூ அவர்கள் தான் சிங்­கப்­பூரை இலங்கை போல் மாற்­றுவேன் என்று அன்று சூளுரை உரைத்­தி­ருந்தார்.

இன்று இந்த ஒரு சந்­தர்ப்­பத்தை நாங்கள் நழுவ விட்டால் இந்த நாடு சீர­ழிந்து போகும். சின்­னா­பின்­ன­மாகி விடும். இது வெறும் வாய்ச்சொல் அல்ல. எந்த ஒரு இனமும் தொடர்ந்து அடி­மைப்­பட்­டி­ருக்க விரும்ப மாட்­டாது. யார் இல்லை என்­றாலும் நாங்கள் இன்று ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் இரா­ணு­வத்­தி­னரின் மேலாண்­மையின் கீழ்த்தான் வாழ்­கின்றோம். இந்­தி­யாவின் அனு­ச­ர­ணையால் வட­மா­கா­ண­சபை என்று ஒன்று கிடைத்­தாலும் எம்மால் எம்மைச் செவ்­வனே ஆள சட்டம் இடங் கொடுக்­க­வில்லை என்­பதே யதார்த்தம். எனவே எமது மொழிஇ இடங்கள்இ மதங்கள்இ கலா­சாரப் பின்­னணி என்­பன மற்­றை­யோரால் சூறை­யா­டப்­ப­டாமல் அவற்றைப் பாது­காத்து சுமூ­க­மாக எல்­லோ­ரு­டனும் சகஜ வாழ்வு வாழக்­கூ­டிய விதத்­தி­லேயே எமது வரைவை முன்­வைத்­துள்ளோம்.

அதனை முழு­மை­யாக வாசிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று நினைக்­கின்றேன். ஏற்­க­னவே பிர­திகள் உங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக அறி­கின்றேன். உங்கள் கருத்­துக்­களைஇ ஆவ­ணத்­தி­லுள்ள ஏதேனும் முரண்­பா­டு­களை நீங்கள் எடுத்துக் கூறுங்கள்.

ஆங்கிலத் தமிழ் கருத்துருக்கள் அனுப்பப்பட்டாலும் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் இன்னமும் முடிந்த பாடில்லை. சிங்கள உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இதனை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. தமிழிலான கருத்துருவையும் ஆங்கிலத்திலான கருத்துருவையும் உங்கள் முன் இத்தால் சமர்ப்பித்து அரசாங்கத்தினிடம் கையளிக்க சபையின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கின்றேன்.

30ஆம் திகதி சம்பந்தனிடம் கையளிக்கப்படும்

இதேவேளை குறித்த வடமாகாண சபையின் அரசியல் தீர்வு முன்மொழிவானது நேற்றையதினம் வடமாகாண சபை அமர்வில் திருத்தங்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த முன்மொழிவை எதிர்வரும் 30 ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வடமாகாண முதலமைச்சர்இ வடமாகாண சபையின் அவைத்தலைவர்இ வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து வடமாகாண சபை உறுப்பினர்களின் முன்னிலையில் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த முன்மொழிவுகள் ஜனாதிபதிஇ பிரதமர்இ சபாநாயகர் ஆகியோரிடமும் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை, சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் நாடு சீர­ழியும்; சி.வி. எச்­ச­ரிக்கை.... Reviewed by Author on April 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.