உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடாத்த தீர்மானம்....
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது நடவடிக்கைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவு செய்ய உள்ளதாக அதன் தலைவர் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடாத்த தீர்மானம்....
Reviewed by Author
on
May 07, 2016
Rating:

No comments:
Post a Comment