மடு.மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு....
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மடு கல்வி வலய மாணவர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, வடமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவ, மாணவிகள் 10 பேருக்கு தனது நிதி ஒதுக்கீட்டில் கொள்ளவனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை நேற்று வழங்கியுள்ளார்.
மடு.கல்விவலய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, குறித்த துவிச்சக்கர வண்டிகள் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி, மடு வலயக் கல்விப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மடு.மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு....
Reviewed by Author
on
May 07, 2016
Rating:

No comments:
Post a Comment