அண்மைய செய்திகள்

recent
-

ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் திருவிழா ! கொடியேற்றமும் ,நவநாள் ஆரம்ப வழிபாடும் .- 2016 .

ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் திருவிழாவை முன்னிட்டு 20 - 05 - 2016 இன்றையதினம் சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்குத்தந்தை அருட்பணியூட் குரூஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் கொடியேற்றமும் ,நவநாள் ஆரம்ப வழிபாடும் ஆரம்பமானது,28- 05 - 2016 நேற்றையதினம் சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்குத்தந்தை அருட்பணி
யூட் குரூஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் திருப்பலியும் அதனைத்தொடர்ந்து நற்கருணை பவனியும் இடம்பெற்றது.
இவ் வழிபாட்டு நிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளாரும் ,அருட்பணி மரியதாசன் அடிகளாரும் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தார்கள் .
அருட்சகோதரிகள் ,கொஸ்க்கா,சுஜாந்தினி ,றேகா ஆகியோரும் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லொஸ் அவர்களும் மற்றும் ,பங்குமக்களும் அதிகளவில் கலந்து வழிபாட்டை சிறப்பித்தனர்திருநாள் திருப்பலி
ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் திருநாள் திருப்பலி மன்னார் மறைவட்ட ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அடிகாளார் தலைமையில்,மன்னார் மறைவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார் ,அருட்பணி சீமான் மரியதாசன் அடிகளார் ,அருட்பணி மரியதாசன் குரூஸ் அடிகளார் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி யூட் குரூஸ் அடிகளார் இணைந்த கூட்டுத்திருப்பலியாக 29- 05 - 2016 இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 06 ;30 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
.
மேலும் இன்றைய திருநாள் திருப்பலிக்கு அருட்சகோதரிகள் ,கொஸ்க்கா, மரிஸ்ரெலா ,சுஜாந்தினி ,றேகா ஆகியோரும் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லொஸ் அவர்களும் மற்றும் ,பங்குமக்களும் அதிகளவில் கலந்து கொண்டு திருவிழாவை
சிறப்பித்தார்கள்




ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் திருவிழா ! கொடியேற்றமும் ,நவநாள் ஆரம்ப வழிபாடும் .- 2016 . Reviewed by NEWMANNAR on May 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.