மன்னார் நானாட்டான் பாடசாலையில் இன்று 25-05-2016 மூன்று நிகழ்வுகளின் சங்கமம்….முழுமையான படங்கள் இணைப்பு
மாணவதலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
புனித டிலாசால் திருவிழா
மாணவர்களின் சிற்பாய் படையணி பயிற்சி முடித்தவர்களுக்கான சின்னமும் சான்றிதழும் வழங்கும் நிகழ்வு.
மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 09 மணியளவில் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு குத்துவிளக்கேற்றியதோடு தமிழ்தாய் வாழ்த்திசைக்க மாணவர்களுக்கான சின்னம் சுட்டும் விழாவும் அதனைத்தொடர்ந்து டிலாசால் விழாவும் கொண்டாடப்பட்டதோடு கண்டியில் மாணவர்களுக்கான சிற்பாய்படையணி சிறப்புப்பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சின்னமும் சான்றிதழினையும் அதிபரான அருட்சகோதரர்.விஐயதாசன் மற்றும் அருட்சகோதரர் செல்வதாஸ் அவர்களுடன் மாணவர் சிற்பாய் படையணியின் மன்னார் மாவட்ட உதவிப்பொறுப்பதிகாரி திரு.சாருஹாசன் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சின்னங்களையும் அதிபர் அவர்கள் சான்றிதழையும் வழங்கி வைத்தனர்.
இம்மூன்று நிகழ்வுகளிளும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
மன்னார் நானாட்டான் பாடசாலையில் இன்று 25-05-2016 மூன்று நிகழ்வுகளின் சங்கமம்….முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 25, 2016
Rating:

No comments:
Post a Comment