யாழ் நகர அபிவிருத்திக்காக 55 மில்லியன் டொலர்...
யாழ் நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய 55 மில்லியன்அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
குளங்களை புனரமைப்பு செய்தல்,முறையான வடிகாலமைப்பை அபிவிருத்தி செய்தல்,யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் கச்சேரியை பாதுகாத்தல் முதலானவற்றிட்கே இந்த நிதிஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அபிவிருத்தி திட்டங்களுக்காக தற்போது பல திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், யாழ் நகரை அழகிய நகராக மாற்றுவதே இதன்நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ் நகர அபிவிருத்திக்காக 55 மில்லியன் டொலர்...
Reviewed by Author
on
May 25, 2016
Rating:

No comments:
Post a Comment