வடக்கில் இடம்பெயர்ந்தோரின் காணிகளை இனம்காணுவதற்கான இறுதித்திகதி அறிவிப்பு!
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் அவர்களுடைய காணிகளை இனம்காணும் செயற்பாட்டை, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள்( ஜூன் 3) நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இந்த செயற்பாட்டை செய்துமுடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம உள்ளிட்டவர்களும் முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் இடம்பெயர்ந்தோரின் காணிகளை இனம்காணுவதற்கான இறுதித்திகதி அறிவிப்பு!
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment