அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனுடன் பகையில்லை - விக்னேஸ்வரன் பகிரங்கம்...


இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதென்றும், இவ்வாறான சூழ்நிலையில் புதிய கட்சியொன்று அவசியமற்றதென்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் விக்னேஸ்வரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும், குறித்த கட்சியானது, கூட்டமைப்பிற்கு சவாலாக அமையும் என்றும் அண்மையில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, சி.வி. விக்னேஸ்வரன் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பிப்பதால், எவ்வித இலாபமும் ஏற்படப் போவதில்லையென்றும், சம்பந்தனுடன் நல்லுறவையே பேணுவதாகவும், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளில் குறிப்பிடுவது போன்று எமக்குள் எந்தவொரு பகையுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வட மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த யோசனைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தமிழர்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில், அவர் உறுதியாக உள்ளார் என்றும், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுடன் பகையில்லை - விக்னேஸ்வரன் பகிரங்கம்... Reviewed by Author on May 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.