அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா செயலகத்தில் சொல்ஹெய்முக்கு உயர்பதவி...


இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளராக ஒரு காலத்தில் செயற்பட்ட நோர்வேயின் எரிக் சொல்ஹெய்முக்கு ஐக்கிய நாடுகளின் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் திட்டத்துக்கான நிறைவேற்று பணிப்பாளராக அவரை செயலாளர் பன் கீ மூன் நியமித்துள்ளார்.

குறித்த சுற்றாடல் திட்டம் மேற்கொண்ட பரிந்துரைக்கு அமையவே எரிக் சொல்ஹெய்ம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு;ள்ளார்.

சொல்ஹெய்ம், தற்போது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி துணைக்குழுவின் தலைவராக 2013ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறார்.

சொல்ஹெய்ம், 2000 ஆண்டுகளில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா செயலகத்தில் சொல்ஹெய்முக்கு உயர்பதவி... Reviewed by Author on May 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.