பெயரில் மாத்திரம் நவீனம் கொன்ட மன்னார் “நவீன மீன் சந்தை”....படங்கள் இணைப்பு
மன்னார் மண்ணில் அபிவிருத்தி அவசியம் அது தொடர்கிறது…… எமது பிரச்சினையை இதுவரைக்கும் எந்த பத்திரிகைக்கும் வழங்கவில்லை மன்னார் மண்ணின் பிரச்சினையை தெரியப்படுத்தி தீர்வு காணவே......நியூ மன்னார் இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற மடலின் அபிவிருத்தி தேவைப்படுகின்ற…………………………………………………….
பெயரில் மாத்திரம் நவீனம் கொன்ட மன்னார் “நவீன மீன் சந்தை”
2000.05.22ஆம் திகதி மீன் விற்பனைக்காக வழங்கப்பட்டதே இந்த மீன் விற்பனைச் சந்தையாகும். இச்சந்தையானது சாதாரன அடிப்படை வசதி கூட செய்யப்படாத நிலையில் “நவீன மீன் சந்தை என பெயரிடப்பட்டு” பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இருந்தும் யுத்த காலத்தில் அமைத்த மீன் சந்தை என்;பதன் காரணமாக படிப்படியாக நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே 15 வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் மன்னார் மீனவத் தொழிலாளர்களினதும் மன்னார் பொதுமக்களினதும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெறும் கனவாகவே இருந்து வருகின்றது. இதற்கான காரணம் இன்று வரை இந்த மீன் சந்தையின் சாதாரண அடிப்படை வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை.
பிரதேச சபையாக இருந்த மன்னார் நகரசபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இச்சந்தையினை உளளுராட்சி மன்றம் பொறுப்பேற்று மீன்பிடி அமைச்சுக்கு வழங்கப்படும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
வருடா வருடம் பல லட்சம் ரூபாய்க்கு கேள்விபத்திரம் மூலம் ஏலம் விடப்படுகின்றது இந்த மீன் சந்தை. இதன் மூலமாக பல இலட்சம் ரூபா இலாபம் பெறப்பட்டாலும் 16 வருடம் ஆகியும் இன்னமும் சந்தை கட்டிடங்களுக்கு வர்ணப10ச்சு ப10சப்படாத நிலையிலேயே காணப்படுவதுடன் காக்கை எச்சங்கலாளும் வெற்றிலை எச்சங்களாலுமே வர்ணம் ப10சப்பட்டுள்ளது.
இவ்மீன்சந்தையில் 40 இற்கு மேற்பட்ட வியாபாரிகள் தினமும் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் அத்தோடு மன்னார் நகரில் மக்கள் அதிகமாக நுகர்விற்காக கூடும் இடங்களில் பிரதான இடமாகவும் உள்ளது மீன்சந்தையின் அருகாமையில் மரக்கறி சந்தை மாட்டிறைச்சி கடை கோழி இறைச்சிக்கடை சாப்பாட்டுக்கடைகள் பலசரக்கு கடைகள் பலவுண்டு ஆனாலும் நுகர்வு அதிகமுள்ள மீன்சந்தையில் நிலமை மிகவும் மோசமான நிலையில் துப்பரவின்றி கழுதை நாய்களின் மலங்களோடும் வெற்றிலை துப்பல் காக்கை எச்சம் நிறைந்ததாகவே சுகாதாரமற்ற நிலையிலே காணப்படுகின்றது.
ஒழுங்கான…..
மலசல கூட வசதிää
மின்சார வசதி
தண்ணீர் வசதி
மீன் சந்தைக்கு வர்ணம் தீட்டல் வேண்டும்.
மீனவர்களுக்கு திடிரென ஏற்படுகின்ற சுகயீனங்களுக்கான கவனிக்க தக்க முதலுதவியுடன் கூடிய அறை தேவை
மழைக்காலத்தில் மீன் சந்தையின் நுழைவாயில் ஒரு நீச்சல் தடாகம் போல் காட்சியளிக்கும் இதனையும் சீர்திருத்த வேண்டும்.
மற்றும் நீர் வடிகாலமைப்பு போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலையிலேயே இந்த மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டது. மன்னார் மக்களினுடைய அன்றாட நடவடிக்கைக்கு மிகவும் அத்தியாவசியமான இடமாக கணப்படும் இம் மீனவச் சந்தை ஒரு ப10ரணப்படுத்தப்படாத பாவனைக்கு பொருத்தமற்ற ஓர் கட்டிடமாகும்.
அடிப்படை சுகாதார வசதிகள் கூட காணப்படாத இம் மீனவச் சந்தையின் மீன் விற்பனையாளர்கள் பாரியளவு சிரமத்தினையும் அசளகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். இப் பிரச்சினை தொடர்பில் மன்னார் நகர சபைக்கும் குறித்த அரச உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்தும் கூட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
மன்னார் மீன் சந்தையானது மன்னார் மாவட்ட மக்களின் துயரத்தை எடுத்துக் காட்டுகின்ற ஒரு துயரச் சின்னமாகவே என்றும் காட்சியழித்து வருகின்றது. அத்துடன் அன்றாட வாழ்க்கையித் தேவைக்காக பயன்படுத்தும் இந்த சந்தை சுகாதாரமற்ற நிலையில் புனரமைக்கப்படாமையானது மக்களின் அடிப்படை தேவையைக் கூட நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் பின்நிற்கும் நிலமையே காணப்படுகின்றது.
எனவே இந்த அவல நிலையை மாற்றி நவீன வசதிகளை ஏற்படுத்த குறித்த அரச நிறுவனமான மன்னார் நகர சபை உதவ முன்வர வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களும் மீனவ சங்கங்களும் மீன் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மன்னார்விழி-

பெயரில் மாத்திரம் நவீனம் கொன்ட மன்னார் “நவீன மீன் சந்தை”....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 08, 2016
Rating:

No comments:
Post a Comment