தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் .-Photos
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று (புதன் கிழமை) உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளி ஒருவரும் அடங்குகின்றார்.இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 20 பேரை இன்று 11 ஆம் திகதி புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடதோடு,வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை இன்று(11) வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரனை மீண்டும் இன்று (புதன் கிழமை) மீண்டும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த 21; மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த மீனவர்களில் 20 பேரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், வயது குறைந்த சிறுவர் மீனவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் .-Photos
Reviewed by NEWMANNAR
on
May 11, 2016
Rating:
No comments:
Post a Comment