அண்மைய செய்திகள்

recent
-

மதுபோதையற்ற வீடு மதுவற்ற நாட்டை அமைக்க மாணவர்கள் பிரமாணம்....


நாட்டின் அபிமானத்தைக் காப்பதற்கும் மதுபோதையற்ற நாடாக மாற்றுவதற்கும் ஒன்றிணைவதாக ஹற்றன் கல்வி வலய பாடசாலை மாணவர்கள் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் எதிர்காலத்தை நாங்களே பொறுப்பேற்கின்றோம். எனவே இந்த நாட்டை மதுபோதையிலிருந்து விடுதலை பெற்ற நாடாக மாற்றுவதற்கான சவாலை பொறுப்பேற்கின்றோம் என்று பாடசாலை மாணவர்கள் தீர்மானம் செய்து கொண்டுள்ளனர்.

மதுபோதையற்ற வீடு, மதுவற்ற நாடு என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொனிப்பொருளில் ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹற்றன் ஸ்ரீபாத மத்திய மகா வித்தியாலயம், கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயம், களுகல மகா வித்தியாலயம் மற்றும் கடவல தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகளிலும் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் ஹற்றன் ஸ்ரீபாத மத்திய மகா வித்தியாலயத்தில், ஹற்றன் சுங்கத் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த செயலமர்விற்காக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் மஹேஷி மதுவந்தி மற்றும் எவ்.ஆர்.எல். சாலி ஆகியவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதோடு, ஹற்றன் சுங்கத் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.எம்.பி திலகரட்ணவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையற்ற வீடு மதுவற்ற நாட்டை அமைக்க மாணவர்கள் பிரமாணம்.... Reviewed by Author on May 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.