மன்னார் பரப்பான்கண்டல் சிறுக்குளம் கிராமத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பிப்பு.-Photos
நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் பரப்பான் கண்டல் சிறுக்குளம் கிராமத்தில் 4.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டத்தில் மேலும் ஒரு தொகுதி நன்னீர் மீன் குஞ்சுகள் இன்று செவ்வாய்க்கிழமை(10) மாலை வளர்ப்பிற்காக விடப்பட்டுள்ளது.
மன்னார் பரப்பான் கண்டல் சிறுக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நன்னீர் மீன் வளர்ப்பு நிலையத்தில்; குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.
சுமார் 22 ஆயிரம் நன்னீர் மீன் குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டுள்ளது.குறித்த நன்னீர் மீன் வளர்ப்பு நிலையத்தில் விடப்பட்டுள்ள மீன் குஞ்சுகள் 45 நாற்களுக்குப்பின் பிடிக்கப்பட்டு குளங்களில் விடப்படும்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை ஒரு தொகுதி நன்னீர் மீன் குஞ்சுகள் விருத்திக்காக விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மீன் வளர்பினை இன்று மாலை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பரப்பான்கண்டல் சிறுக்குளம் கிராமத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 10, 2016
Rating:
No comments:
Post a Comment