மன்னாரில் ரெலோ முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.Photos
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 30 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (6) வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.
மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பற்றிக்(வினோ) தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மாவட்ட துனைப்பொறுப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் இரட்னசிங்கம் குமரேஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினம் அவர்களின் உறுவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மன்னாரில் ரெலோ முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.Photos
Reviewed by NEWMANNAR
on
May 06, 2016
Rating:
No comments:
Post a Comment