வடக்கின் அனைத்து தீவுகளுக்கும் விரைவில் மின்சாரம்...
வடக்கில் அமைந்துள்ள அனைத்து தீவுகளுக்கும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியமலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், இதற்கான பொறுப்பு பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய ஊர்காவற்துறை, நயினா தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வட மாகாணத்திற்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக சூரியமின் சக்தியை பயன்படுத்துவது நிரந்தர தீர்வு ஒன்றில்லை என்றும், இது சம்பந்தமாக நிரந்தர தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வடமாகாண மின்சார பிரதி பொதுமுகாமையாளரான பிரியந்த குணதிலகவிற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கின் அனைத்து தீவுகளுக்கும் விரைவில் மின்சாரம்...
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment