அண்மைய செய்திகள்

recent
-

சிகிச்சைக்கு வந்தபெண்ணின் முகத்தை டாட்டூவாக வரைந்த செவிலியர்: பணிநீக்கம் செய்த நீதிமன்றம்


சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் புகைப்படத்தை தனது கையில் டாட்டூவாக வரைந்த ஆண் செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் சூரிச்சில் செயல்பட்டு வந்த மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 36 வயது பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு சென்றுள்ளார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு அம்மருத்துவமனையில் பணியாற்றிய ஆண் செவிலியர் ஒருவர் மருத்துவரீதியாக பல உதவிகளை வழங்கியுள்ளார்,

இதனால் இவர்கள் இருவருக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது, சிகிச்சை முடிந்த பின்னர், செவிலியர் அப்பெண்மணியிடம் நீ என்னுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்என தெரிவித்துள்ளார்,

அதற்கு அப்பெண்ணும் சம்மதித்து அவருடன் பழகிவந்துள்ளார், இந்நிலையில் அதிக நண்பர்களை வைத்திருப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதுதான் இவரின் வேலை என்பதை அறிந்த அப்பெண், அந்நபரை சந்திக்கையில் நான் இனிமேல் உங்களை பார்க்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த செவிலியர், கடந்த மார்ச் மாதம் அப்பெண்ணுக்கு ஒருமின்னஞ்சலை அனுப்பியுள்ளார், அதில் இப்பெண்ணின் முகத்தினை தனது கையில் டாட்டூவாக வரைந்துஅதனை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

இந்த மின்னஞ்சலைபார்த்து மனஅமைதி இழந்த அப்பெண், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், இதனை விசாரித்த நீதிமன்றம், பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் முகங்களை டாட்டூவாக வரைவதற்கு அனுமதி தேவையில்லை,

ஆனால், சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் முகத்தினை டாட்டூவாக வரைய வேண்டுமென்றால், அதற்கு அப்பெண்ணின்அனுமதி கண்டிப்பாக வேண்டும்.

எனவே அனுமதியின்றி தனிநபரின் முகத்தினை டாட்டூவாக வரைந்தது தவறு என கூறி அந்த செவிலியரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சிகிச்சைக்கு வந்தபெண்ணின் முகத்தை டாட்டூவாக வரைந்த செவிலியர்: பணிநீக்கம் செய்த நீதிமன்றம் Reviewed by Author on May 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.